தாட்கோ

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்

குறிக்கோள்

ஆதிதிராவிடர் மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் வருமானம் ஈட்டும் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வறுமையை குறைத்தல் இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தில் தனிநபர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் இருவரும் பயன்பெறலாம்.

மானியம்

  • திட்டச் செலவில் 50% அல்லது ரூ. 50,000/- இவற்றில் எது குறைவோ அத்தொகை முன் விடுவிப்பு மானியமாக வாங்கப்படும்.

தகுதி
  • விண்ணப்பதாரர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் 18 -45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் வர்த்தகத்தில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நிபந்தனைகள்
  • திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்படும்
  • விண்ணப்பதாரர் மானியம் அனுமதிக்கப்பட்ட மாவட்டத்தில் வணிகத்தை மேற்கொள்ள வேண்டும்.